Sunday 8 December 2013

சிரி சிரி சிரி சிரி 3

மனைவி :----- ஐய்யோ இந்த “ஹோட்டல் சாம்பார்” எவ்வளவு டேஸ்டா இருக்கு. சர்வர்கிட்ட எப்படியாவது ஐஸ் வச்சு என்ன “சீக்கிரெட்ன்னு” கேட்கப்போறேன்.

கணவன் : -----இங்க பாரு,யாரெல்லாம் ஹோட்டல்வச்சு நடத்தறாங்களோ,தொழில் ரகசியத்த சொல்லமாட்டாங்க. பேசாம இரு.

சர்வர் :------ என்ன சார் வேற எதாவது சாப்பிடறீங்களா?

மனைவி :------- ஏங்க உங்க ”ஹோட்டல் சாம்பார்” இவ்வளவு டேஸ்ட்டா இருக்கே? என்ன சீக்கிரட்டுன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்....

சர்வர் : ----- மேடம் நீங்க எவ்வளவு அழகா இருக்கீங்க. உங்க வயசென்னா?

மனைவி: ------- சாம்பாருக்கும், வயசுக்கும் என்ன சம்பந்தம்? நான் யாருகிட்டேயும் என் வயசை சொல்ல மாட்டேன்.

சர்வர் :--------- எல்லாமே “மேக்கப்லத்” தான் ஓடுது மேடம். உண்மை தெரிஞ்சதுன்னா மத்தவங்களுக்கு ஷாக்காயிடும்!!!!!!!!!!!!

இதுக்குத் தான் ஓவரா மேக்கப்பும் போடக்கூடாது. சீனும் போடக்கூடாது!!!!!!!!!!!!!!


தலைல நாலு முடிய வச்சிகினு அவனுங்க பண்ற அளப்பறைய தாங்க முடியலப்பா.....

### நிமிஷத்துக்கு நாலு தடவ தலைய சீவி தொலைக்கரானுவோ..!!


தயாரிப்பாளர் : முதல்வர்கிட்ட இல்லே .. .. .. இந்தப் பிரச்னையைப் பிரதமர்கிட்டேயே கொண்டுபோகப் போறேன். இன்னும் கால்வாசி படம் ஷூட்டிங் பாக்கியிருக்கு. அதுக்குள்ள முழுப்படமும் திருட்டு வி.சி.டி-ல் வந்துடுச்சு .. ..


டாக்டர் கண்ணு சரியா தெரிய மாட்டேங்குது..?

NURSE NAMITHA : சரி..சரி…இதுதான் சாக்குன்னு கையைப் பிடிக்காதீங்க…
நான் நர்ஸ்…!
 
 

முற்போக்கு என்றால் வாந்தி,
பிற்போக்கு என்றால் பேதி!


காதலி : நம்ம காதலை மெதுவா எங்க வீட்டில் சொல்லிட்டேன்.

காதலன் : அவங்க என்ன சொன்னாங்க, ஒத்துக்கிட்டாங்களா?

காதலி: மெதுவா சொன்னதால அவங்களுக்கு கேட்கலை...


டேய் பேஸ்புக்லையே இருக்கியே உனக்கு வேலை இல்லையா?

நான் பேஸ்புக்ல இருக்குறதையே பார்த்துட்டு இருக்கியே உனக்கு வேலை இல்லையா?


“”ஒரு அறையின் நீளம் 30 அடி, அகலம் 20 அடி. பெருக்கினால் என்ன வரும்?”

“”குப்பை சார்!”


நீ சிரிக்கும்போது ஒவ்வொரு விநாடியும் உன் பின்னால்
நான் இருப்பேன்.
ஏனென்னாறால் அந்தக் கொடுமையை என்னால் பார்க்க
முடியாது..!


ரசிகை:அண்ணே என் குழந்தைக்கு பெயர் வையுங்க ? விஜய்: என் மனசை தொட்ட பெயர் "ஷோபா" ன்னு வையுமா.
ரசிகை: இது ஆம்பள புள்ளை சார்

# அப்போ நாற்காலி ன்னு வை


நண்பன் 1 : நான் செஸ் விளையடபோறேன் உனக்கு விளையாட தெரியுமா?
நண்பன் 1 : தெரியுமாவ? நீ போய் ground ல இரு நான் shoe மாட்டிட்டு வரேன்


இதுதான் என்னோட கனவு இல்லம்…!

அதுக்காக, ‘காலிங் பெல்’ ஒலியை குறட்டைச் சப்தத்துல வைக்கணுமா..?


EB காரனுக்கு போன் பண்ணி கரண்ட் எப்ப வரும்ன்னு கேட்டா “

உன்னோட மொபைல்ல இன்னும் சார்ஜ் இருக்கான்னு” கேக்குறான்


          
வாங்க வாங்க நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா இல்லை பெண் வீட்டுக்காரரா
இல்லைங்க நான் பொண்ணோட பழைய வீட்டுக்காரருங்க


சர்தார்ஜி 1: என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் ஷாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக் கலர் ஷாக்சும் அணிந்திருக்கிறாய்.

சர்தார்ஜி 2: சொன்னால் ஆச்சரியப்படுவாய்! என் வீட்டில் இதுபோலவே இன்னொரு ஜோடியும் இருக்கிறது.


சோமு : கடவுளே! எனக்கு ஒரு ரூம் நிறைய தங்கம் கொடு.

ராமு : எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு.

கோமு : எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு.

சோமு - ராமு : ?!?!?!?!?!?


ஒரு பொண்ணு திரும்பி பார்த்துடா ஒரு பைய்யனோட தூக்கம் போச்சு

நாலு பசங்க திரும்பி பார்கலனா ஒரு பொண்ணோட தூக்கம் போச்சு..! 


"எங்க வீட்டுக்காரர் எப்பப் பார்த்தாலும் டி.வி-யைப் பார்த்துக்கிட்டிருக்கார்

டாக்டர்.." "இது ஒண்ணும் பெரிய பிரச்சினை இல்லையே..?"

"பவர் கட் ஆனா கூட மெழுகுவர்த்தியைக் கொளுத்தி வச்சிக்கிட்டு பார்த்துக்கிட்டிருக்காரே.."


நோயாளியின் உறவினர்: டாக்டர், ஆபரேஷன் எவ்வளவு நேரம் நடக்கும்?”

டாக்டர் : ஐந்து நிமிஷத்துலயும் முடியலாம், ஐந்து மணி நேரமும் ஆகலாம். எதுவும், நோயாளியோட உயிர் போறதை வைச்சுத்தான் சொல்ல முடியும்!


கணவன்: `தொப்பு’ன்னு சத்தம் கேட்டுதே… கொல்லை கிணற்றில் குதித்தது யார்னு போய்ப் பார்த்துவிட்டு வா!

மனைவி: முடியாது! குதிச்சது உங்கம்மா இல்லைன்னு தெரிஞ்சா, அந்த ஏமாற்றத்தை என்னால் தாங்கிக்கவே முடியாது!


பையன்: எனக்கு வேலை இல்லைனு தெரிஞ்சும் எப்படி நம்ம கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்க.. ??

பொண்ணு: பையன் என்ன பண்ணுறான்னு கேட்டாங்க, வயத்துல உதைக்குறானு சொன்னேன்... அதான்....!!!???


வாத்தியார் : காந்தி ஜெயந்தியை பத்தி உனக்கு தெரிந்ததை சொல்லு?

மாணவன் : சார், காந்தியை பற்றி தெரியும், ஆனால் ஜெயந்தியை பற்றி தெரியாது சார்.


"சாப்பிட்டு முடிச்சவுடனே உன்னைப் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை உன்கிட்ட என்னவோ கேட்டாரே, என்னவாம்?''

"இதே மாதிரி சாப்பாடு எப்பவும் கிடைக்குமான்னு கண்ணீர் மல்க கேட்டார்''


சார்! நாங்க வீட்டைப் பூட்டிட்டு வெளியூர் போயிருக்கும்போது யாரோ திருடன் புகுந்து வீட்டையே காலி பண்ணிட்டுப் போயிட்டான்''

"ஆச்சரியமா இருக்கே?''

"இதுக்கே ஆச்சரியப்பட்டா... போகும்போது வீட்டை ஒருத்தருக்கு வாடகைக்கு வேற விட்டுட்டுப் போயிட்டான்''


ஆண்களை அதிக தூரம் நடக்க வைக்கும் இரண்டு விசயங்கள்.

ஒண்ணு பிகர்..!

மற்றொன்று சுகர்...!


நான் இப்ப தினமும் வாக்கிங் போறேன்னா, அதுக்கு நம்ம டாக்டர்தான் காரணம்.

ஏன்... ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா..?

நீ வேற... முதல்ல கார்ல வந்துட்டிருந்தேன். ட்ரீட்மெண்ட்டுக்குச் செலவு செஞ்சு செஞ்சு, இப்ப நடக்கும்படி ஆயிடுச்சு!




திருடன் நேத்து ராத்திரி உங்க வீட்ல திருடும்போது நீங்க முழிச்சிக் கிட்டு இருந்ததா சொல்றீங்க... அப்படின்னா ஏன் சத்தம் போடல ?

சத்தம் போட்டா நாம மாட்டிக்குவோம்னு வேலைக்காரி என் வாயப் பொத்திட்டாய்யா!
 
திருடன்: மரியாதையா பீரோ சாவியைக் கொடு...

இல்லத்தரசன்: இதையேதாம்ப்பா நான் கல்யாணம் ஆனதுலேர்ந்து என் வீட்டுக்காரிகிட்டே கேட்டுக்கிட்டிருக்கேன்...
 
              

No comments:

Post a Comment