Sunday 8 December 2013

சிரி சிரி சிரி சிரி

ஜட்ஜ் ஐயா "ஆர்டர்,ஆர்டர்" என மேஜை தட்டி கூப்பிட்டாலும்,
இதுவரை ஒரு "சர்வர்" போய் "ஆர்டர்" எடுத்ததில்லை!
என்ன_நான்_சொல்லுறது


'காதல்' என்பது காது குடையிற மாதிரி,பல்லு குத்துற மாதிரி,மூக்கு நோண்டுற மாதிரி நமக்கு தான் சுகமா இருக்கும்,சுத்தி நின்னு பாக்குறவனுக்கு கடுப்பா இருக்கும்.

என்ன_நான்_சொல்லுறது


அந்த பேஷன்ட்டுட்ட ஆபரேஷன் பண்னும்போது பீஸ் தரவேண்டாம்னு
சொன்னீங்களா டாக்டர்?

ஆபரேஷன் முடிஞ்சபிறகு இப்படி உயிரோடு
வந்து நிற்பான்னு யாருக்கு தெரியும்


ரயில்ல போகும் போது மொபைலை ஃபிளைட் மோட்ல போடலாம் - ஆனா பிளைட்ல போகும் போது மொபைல்ல ரயில் MODE போட முடியுமா என்ன_நான்_சொல்லுறது ?  
வக்கீல்: உங்க கேஸ் முடிஞ்சிருச்சி...

மனுதாரர்: என்ன பீஸ் சார்?

வக்கீல்: மொத மாசம் 50,000 ரூபாய் தரணும். அதுக்கப்புறம் மாசம் 5,000 ரூபாய் வீதம் 36 மாசம் தரணும்.

மனுதாரர்: என்ன சார், நான் ஏதோ கார் வாங்குறதுக்கு லோன் கட்டற மாதிரியே சொல்றீங்களே..!

வக்கீல்: கரெக்ட்டா சொன்னீங்க... கார் வாங்குறது நீங்க இல்லை, நான்தான்.


மனைவி : என்னங்க அழகான பொண்ணுங்களை எப்படி நினைக்கனும்?

கணவன் : உன் தங்கச்சியா நினை !


நான் பெத்தவங்களையே விட்டுட்டு உன்கூட வர்றேன்
டார்லிங்…!

நான் பெத்ததையே விட்டுட்டு வர்றேன், டியர்!!??


மன்னா ! அண்டை நாட்டரசன் குதிரையில்
வந்து நம் அரசியை கடத்திச் சென்று விட்டான்…!

ராணி சத்தம் போடவில்லையா?

”சீக்கிரம்..சீக்கிரம்..” என்று அலறினார்கள், மன்னா..!

பிரபலமான அமைச்சர் ஒருவர், பல லட்ச ரூபாய் மதிப்புள்ள
கார் ஒன்றை வாங்கினார்.

அந்தக் காரை ஓட்டுவதற்கு டிரைவரும் இருந்தார்.

ஒரு நாள் உல்லாசமாக வெளியில் செல்கையில், தன் காரை
ஓட்டிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அமைச்சருக்கு எழுந்தது.

உடனே டிரைவரிடம்,

“நீ சிறிது நேரம் ஓய்வுஎடு. நான் சிறிது நேரம் காரை
ஓட்டுகிறேன்.”என்றார்.

அதனை ஏற்க மறுத்த டிரைவர் சொன்னார்,

“நீங்கள் ஓட்டுவதாக இருந்தால் நான் கீழே இறங்கிக்
கொள்கிறேன்”

“ஏன் அப்படி சொல்கிறாய்?” கேட்டார் அமைச்சர்.

அதற்கு டிரைவர் சொன்னார்,

“ஏனெனில் இது கார். நீங்கள் ஓட்ட நினைப்பதற்கு இது
ஒன்றும் சர்க்கார் அல்ல. கடவுள் பார்த்துக் கொள்வார் என்று
விடுவதற்கு”


அடியே இவன்தான் உன் கள்ளக் காதலனா? பார்க்க
பிச்சைக்காரன் மாதிரி இருக்கான்..!

WIFE : சனியனே..! குடிச்சுட்டு கண்ணாடி முன்னாடி
நிக்காம போய் படு..!


அந்த பழைய பேப்பர் வியாபாரி பாவ மூட்டையை
சுமக்கிறார்னு ஏன் சொல்றே?

தலைவருக்கு வந்த குற்றப்பத்திரிகைகளை
எடைக்கு எடை வாங்கிட்டுப் போறாரே..!


பூவுமேல மனுசன் கிடந்தா பர்ஸ்ட் நைட்டு.
மனுசன்மேல பூவு கி்டந்தா லாஸ்ட்டு நைட்டு.


என்னய்யா இது..மாமூல் டாலர்ல வந்திருக்கு..!

நாம வளர்த்து விட்ட திருடன்கள் இப்ப
வெளிநாட்டிலும் இருக்காங்க சார்..!


பூரிகட்டையால் அடித்தாள் மனைவி.!

எதுக்குடி என்னை அடிச்ச??

உங்க சட்ட பாக்கெட்ல மீனான்னு பேரு எழுதி ஒரு பில்ல பாத்தேன்.

யேய் லூசு அது நான் நேத்து ரேஸ் போயிருந்தேன்ல அந்த குதிரையோட பேருடி.!

அய்யயோ என்ன மன்னிச்சிருங்க

சரி சரி விடு.

சிறிது நேரத்தில் கணவன் குளித்துவிட்டு பாத்ரூமை விட்டு வெளியே வந்தவுடன் மீண்டும் பூரிக்கட்டையால் அடி விழுந்தது

இப்ப எதுக்குடி அடிச்ச??

நீங்க குளிக்க போனதும் அந்த மீனாங்குற குதிர உங்க செல்லுக்கு கால் பன்னுச்சு.!!!


அடக்கடவுளே!

லிவிங் டுகெதர் என்பது வேறு

கள்ளத்தொடர்பு, ரெண்டாம் துணை வேறு.

கடவுளே... இந்த ஓவர் நல்லவைங்ககிட்டருந்து சட்டத்த காப்பத்து.


டாக்டர்: டாக்டர்கிட்ட எதையும் மறைக்கக் கூடாது. காட்டுங்க உங்க பர்ஸை

நோயாளி : பேஷண்ட்கிட்ட எதையும் மறைக்கக் கூடாது காட்டுங்க உங்க நர்ஸை...


அமெரிக்காவில் திருடனை கண்டுபிடிக்கிற மெஷின் கண்டுபிடிச்சிருக்காங்களாம்.

அந்த மெஷின் இங்கிலாந்துல 30 நிமிஷத்துல 70 திருடர்களை கண்டுபிடிச்சுருக்கு.

பிரான்ஸில் 30 நிமிஷத்துல 100 திருடர்களை கண்டுபிடிச்சுருக்கு.

இந்தியாவில் 15 நிமிஷத்துல அந்த மெஷினையே காணோம்!! நாமெல்லாம் யாரு..??

*இந்த ஸ்டேடசையே சுட்டிருக்கோம். நாம யாரு?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

No comments:

Post a Comment